Sunday, September 28, 2014

என் இதயமே


என் இதய ஜீவன் நீயே
இன் மொழியால் கொல்கிறாயே
விழிப் போர் தொடுக்கும்போது
எப்போதும் வெல்கிராயே

எங்காவது கிடைப்பாயா
தேடாமலே

பங்காவது கிடைக்காதா
பாவையுன்தன் மனதிலே

பிறப்பென்று இனி இருந்தால்
கூட இருப்பேன்

உருப்பெற்று சிறப்புற்று
சடுதியில் உனை சேர்ந்திடுவேன்

Friday, September 12, 2014

अनोखा मज़ा

परायी यादें आते जाते रहते हैं 
पराये लम्हें मचलते रहते हैं
बस तुम्हारी निगाहें इशारा कर दे 
और हम ख्व्वाबों में डूब रहते हैं

हसीनों में तुम सबसे हसीं हो
मेरी जान बनके सीने में बसी हो
मोहोल्ले में पताकों का चमत्कार हो तो 
ज़ाहिर है कि मूंह खोलके हसी हो

खुशबू रह जाती है जैसे कपड़ों में
तुम्हारी यादें रह जाती हैं सीने में
तस्वीर बना लेता हूँ दिल में, तब
एक अनोखा मज़ा होता है जीने में
❤D













Monday, September 8, 2014

உன் நயனம்

உறக்கம் துறந்தேன் உன் நினைவிலே
மறக்க முயன்றே  தோற்றேன்
நானாகவே நானில்லையே
வான் மீதிலே நிலவில்லையே
என் கண்களில் அம் முழுமதி
உன் வரவு என் மன நிம்மதி

பறக்கத் துடிக்கும் என் இதயமே
பாவை உந்தன் கண்ணின் பாஷையில்
மறக்க அடிக்கும் என் சித்தத்தை
பூவை உந்தன் மெய்யின் வாசனை

விருந்து உண்ணும் என் எண்ணமே
கோதை உந்தன் பிம்பம் கற்பனையில்
மருந்து போலே உன் நினைவுகள்
காதை பல கூறும் உன் நயனம்
❤D

The Song version, modified from above
உறக்கம் துறந்தேன் உன் நினைவிலே
மறக்க முயன்றே  தோற்றேன் 
நானாகவே நானில்லையே
வான் மீதிலே நிலவில்லையே
என் கண்களில் அந்த நிலவு 
உன் வரவு என் மன நிம்மதி.

பறக்கத் துடிக்கும் என் இதயமே
பாவை உந்தன் கண்ணின் பாஷையில்
மனதை இழந்தேன் நொடிப் பொழுதிலே 
பூவை உந்தன் மெய்யின் வாசனை

விருந்து உண்ணும் என் எண்ணமே
கோதை உந்தன் இன்ப நினைவிலே 
மருந்து போலே உன் நினைவுகள்
காதை பல கூறும் உன் நயனம்
❤D❤

How can India aspire to be a thought-leader?

Two seemly disjointed happenings triggered this article today.  One – I was walking down an old alley here in Singapore, where a signage in ...