Saturday, April 19, 2014

நம்பிக்கை

விழியில் தெரியும்  பிம்பமெல்லாம்
பித்தன் எனக்குப் பிடிக்கவில்லை
மொழியில் தெரியும் அழகெல்லாம்
சித்தம்  கிறங்க ரசிக்கவில்லை

வழியின் மீதென் விழிவண்டோ
தேடித் தளரத் தவறவில்லை
பழியாய் உன்னை பார்க்கத்தான்
ஓடியும் எந்தப் பயனுமில்லை

வருவாய் என்னும் நம்பிக்கையோ
சிறிதும் சிதைந்துப் போகவில்லை
தருவாய் திகட்டா இன்பமெல்லாம்-
பிரிவைப் போற்றிப் பயனுமில்லை


No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...