Saturday, September 4, 2021

ஆசான்கள்

 

குயவர் பட்டறையில் ஒரு  

குழந்தை உருவெடுத்தது .

கன்னி அவள் மனமே அவர்களின் 

களிமண் பாண்டம்.


கனிவும் அறனும் குயவியின் 

கருவிகளாயின.


வேளை இலா தியாகமோ குயவனின்

சூளைகள் ஆயின .   


பாடு பல பட்டு இருவரும் 

பாண்டம் என்னைப் 

படைத்தனர்.


மூப்பு காலத்தில் நான் 

முத்தாய்ப்பாய் அவர்க்கு.

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...