Monday, June 29, 2026

सबका हमसफ़र हो जा

 किसी की सरहदों से बंध के मत रह, दिल मेरे — बेघर हो जा

वो जो है सबमें, उसमें खो के अपना घर हो जा ।

जहाँ से आई थी वो रोशनी, उसी का हिस्सा बन

किसी से डर के मत रुक, आत्मा — निडर हो जा ।


न जाति, न मज़हब, न देश की हो कोई ज़ंजीर तुझ पे

इन सब दीवारों से ऊपर उठ, बेअसर हो जा ।


जो नाम दिया तुझे दुनिया ने, वो भी एक क़फ़स था

उस पर्दे को हटा, 'मनन' — बेख़बर हो जा ।


ये कायनात पुकारे तुझको  "हे बेघर बंदे !"

बस एक ही नग़्मा बन, सबका हमसफ़र हो जा ।

அனிகேதன் (இல்லமற்றவன் — எல்லையற்றவன்)

 எல்லை கடந்து எழுவாய் என் உணர்வே!

கல்லும் மண்ணும் கட்டிய கூட்டை விட்டு!

சொல்லும் பெயரும் சுமையென உணர்ந்து

நில்லாது நீ நிமிர்ந்து பறந்திடு!


ஜாதி என்னும் சங்கிலி அறுத்தெறி!

நீதி என்னும் நிழலிலும் நிற்காதே!

வேதி கடந்த வெளியில் விரிந்திடு —

ஆதி ஒளியில் அமர்ந்து உறைந்திடு!


பேர் சுமந்து பிறந்தவன் அல்லன் நீ!

ஊர் கொடுத்த உருவம் உன்னதமல்ல!

சீர் மிகுந்த சிதம்பரம் உள்ளத்தில் —

நேர் உணர்வால் நிறைந்து தெளிந்திடு!


மண்ணும் விண்ணும் மலர்ந்து அழைக்கின்றன!

கண்ணும் கருத்தும் கரைந்து ஒன்றாகட்டும்!

எண்ணமற்ற ஏகாந்தத்தில் இறங்கி நீ

அண்டம் முழுதும் ஆகி விரிந்திடு!


வா என்று அழைக்கும் வான்வெளி நீயே

தேவனும் நீயே, தீபமும் நீயே!

மனிதன் என்ற பெயரும் மறைந்திடட்டும் —

அனிகேதனாய் நீ ஆகி ஒளிர்ந்திடு!

कोयल

 चमन में आज फिर कोयल की भीनी सी सदा सुनाई दे रही है

हर इक शाख़ के होंठों पे बसी इक नवा सुनाई दे रही है।

बरस बीते थे जिस ख़ामोशी में, वो कली अब चटक उठी है

उसी के लफ़्ज़-लफ़्ज़ से उठती नई हवा सुनाई दे रही है।


ये पत्ता-पत्ता, ये ज़र्रा-ज़र्रा उसी इक धुन में डूब के झूमे

हर इक धड़कते दिल के अंदर वही दुआ सुनाई दे रही है।


उठो कि सहर पुकारती है हर सोई हुई-सी रूह को अब

ज़मीं से आसमाँ तलक इक जगाती सबा सुनाई दे रही है।


‘मनन’ ये सारी कायनात इक ही नग़्मे में जैसे ढलती जाए

तेरी आवाज़ में मुझको ख़ुदा की इक नदा सुनाई दे रही है।


குயில்

கவிதை - 1



சோலை மருங்கில் சுவையுறப் பாடும்

கோலக் குயிலே! குதூகலம் ஊட்டும்!

மாமரக் கொம்பில் மலர்ந்திடு தேனே

காமரு கனிகுரல் கனிவொடு கூவாய்!


பூவிளி தூற்றிப் புதுவசந் தத்தை

தூவென மொழியும் தூயநல் இசையே!

தென்றல் அசைய திகழ்பசுங் காட்டில்

என்றும் இனிக்கும் இயற்கையின் ஓசை!


உயிர்தொறும் ஒளிரும் ஒருபெருங் கீதம்

செயிரறு நெஞ்சில் சுரந்திடும் அமுதம்!

விண்ணும் மண்ணும் விழித்தெழ அழைக்கும்

கண்ணிய காவியக் கனிக்குரற் கோவே!


ஓங்கார இசையில் உலகெலாம் ஒன்றென

தீங்குயில் பாடும் தெய்வத யாழே!


வாழ்க! நின் கீதம் வளர்க!


கவிதை - 2


கருங்குழல் மேகத்தின் கருணையும் தாங்கி,

கதிரவன் பொன்னொளிக் கரங்களும் சூடி,

வானம் தழுவிய வாழ்வின் மறைநாதம்

வார்த்தையின்றியே வழியெனச் சொல்வாயே.


பூக்கள் மொழியாத பொருள்களைப் பாடி,

புன்னகை மறந்த மனங்களைக் கூவி,

துன்பத்தின் தூசியைத் தூரமாய் வீசி,

தூயமாம் நம்பிக்கைத் தீபங்கள் ஏற்றுவாய்.


பிறவிகள் எல்லாம் பிரிவின்றி ஒன்றென,

பெருங்காடு, பாறை, பெருங்கடல் சாட்சியாய்,

அன்பே உலகத்தின் ஆதியென ஓதிடும்

ஆசான் குரலாய் அகமெங்கும் ஒலிப்பாயே.


குயிலே! உன் கீதம் குன்றாத வேதம்;

குயிலே! உன் நாதம் குளிராத தீபம்;

மனிதரின் நெஞ்சம் மலர்ந்திடும் நாள்வரை

மரங்களின் மேனி மறையாமல் பாடுவாய்.




Friday, June 26, 2026

முருகன் காவடி சிந்து

 கந்தனே போற்றுவோம் கடவுளே முருகா

கந்தமலர் சூடிடும் கருணையே கந்தா


வல்லவனே விரைந்திங்கு வாரடா தேவா

வல்லடி வணங்குவோம் வரமொன்று வேலா


செந்தில் ஆண்டவனே சிவகுமரன் முருகா

செந்தமிழ் பாடுவோம் சேவகர் நாதா


பண்ணிய பாவங்கள் பரிந்தொழி தேவா

பண்பிலா நானும் பணிகின்றேன் முருகா


தண்ணருள் தாராயே தாயினும் நாதா

தண்மலர் தூவிட தாழ்ந்தேன் குமரா


மண்ணிடை மாயையில் மறுகுவோம் தேவா

மண்ணை விட்டேற வழிகாட்டு முருகா

ख़ुद को खोना है

मोहब्बत में सुलगती इस अधूरी जान को चूमना है,
तरसती हैं ये आँखें तेरी सूरत को देखना है।
जुदा हालात ने कर तो दिया है हमसे तुमको पर,
नसीबों से लड़कर इन हाथों से तेरे बदन को छूना है।
सहर-ओ-शाम बस तेरी ही ख़ुशबू का तसव्वुर है,
दुआ है अब तो आगोश में भर के तुझ को पाना है।
लकीरों को मिटाकर अपनी आवारगी की रातों में,
तेरे सुर्ख होंठों से अपनी धड़कन को सजाना है।
बिछड़कर तुझसे जीने की तमन्ना मर गई जैसे,
तेरी बाहों में रहकर इस सुलगते बदन को बुझाना है।
ज़माने की बंदिशें अब रोक न पाएँगी 'मनन ' को,
कसम है तुझको ही गले से लगाकर ख़ुद को खोना है।

Thursday, June 25, 2026

கோவையில் ஒரு மதியம்

வெசக் காலம். காந்திபுரம் நாற்சந்தி, பகல் பன்னிரண்டு மணி, சூரியன் நேரா தலையிலேயே தீ மூட்டுகிறான். AUTOCAD கிளாசு முடிஞ்சு நிம்பு சர்பத்து குடிக்கணும்னு நான் நிக்கிறேன். சிவப்பு மாருதி ஸ்விஃப்ட்டும் கருப்பு டிவிஎஸ் ஸ்டார்ரும் ஒரே நேரத்துல நாற்சந்தியிலே நுழையுது — ஆட்டோ மறைவிலிருந்து பொசுக்குன்னு வந்ததால டிவிஎஸ் விசுக்குன்னு திரும்புது, ஹேண்டில்பார் ஸ்விஃப்ட்டோட கண்ணாடி பக்கம் ஒரு டிக்! அந்த ஒரு சத்தம்தான் காந்திபுரம் நாற்சந்தியோட அன்னிய மொதல் கருமாந்திரம்கெரகம்.

ஸ்விஃப்ட்டுல பழனிசாமி — புது கார், கர்வம் மொஞ்சிலேயே தெரியுது — வெருசா இறங்கி பாக்கிறான். ஸ்கிராட்ச் இல்லீங்கண்ணா, கண்ணேதெரியல. ஆனாலும் வாய் திறக்கிறான்: "டேய், என் புது கார்ல ஸ்கிராட்ச் ஆச்சே!" டிவிஎஸ்ல வேல்முருகன் அண்ணா — ஆர்.எஸ்.புரம் தண்ணீர் பிஸினஸ், அந்தப் பைக்கை குழந்தை மாதிரி வளர்த்தவரு — பதனமா இறங்கி: 

"ஏனுங்கோ கண்ணு, ஒண்ணுமில்லீங்கண்ணா!" 

"இருக்கு!" 

"சூரிய வெளிச்சம் ரிஃப்லெக்‌ஷன், கம்மனாட்டி மாரி பேசாத!"

அவ்ளோதான். "தெரியுமா நான் யாருன்னு?! சிங்காநல்லூர் எஸ்ஐ நஞ்சுண்டப்பா என் மாமன், ஒரே போன்ல உன் ஊட்டையே கட்டிருவாரு, செய்வாகளாகும்!" 

வேல்முருகன் அண்ணாவும் விடல: "என் மச்சான் ஆறுமுகம் கோவை ஆர்டிஓல இருக்காரு. உன் டாக்குமெண்ட் சரியா இருக்கட்டும், செய்வாகளாகும்!" — அந்த ஒரு வார்த்தையிலே பழனிசாமிக்கு கண்ணுல படபடப்பு தெரியுது.

நக்கன்பட்டி நாகப்பன் அண்ணா சந்துல சிந்து பாட நெனச்சு சைக்கிள் காரிரியர்ல இருந்த டீ CAN அ தட்டி,  "வாங்கோ கண்ணுங்களா, தேநீரு குடிங்கோ, நிழல்லே நின்னு பாக்கலாம்!" அஞ்சே நிமிஷத்துல நாற்சந்தியே தேநீர் கடையாயிடுது. ஒரு பீளமேடு லாரி டிரைவரு நிறுத்திட்டு 

"என்னாடா?" 

"ஸ்கிராட்ச் சண்டை!" 

"எங்க ஸ்கிராட்ச்?"

 "எங்கயும் இல்லீங்கண்ணா!" 

வழியில வந்த செல்லம்மாள் பாட்டி வாய் மூடல: 

"ஆமாமுங்கோ எஸ்ஐ மாமன்! ஏனுங்கோ, அப்பா யாரோட மாமன் ஐஜிஆ இருந்தா நாற்சந்தியே தனி ஊர் ஆயிடும்! ஸ்கிராட்சே இல்லாத இடத்துல அர மணி நேரம் அக்கப்போர் — அக்கியானமே இல்லீங்கண்ணா இந்த மாக்கானுங்களுக்கு!"

கடைசியா நுழைகிறாரு முருகேசன் அண்ணா — அம்மாயிகிட்ட கீரை வாங்கிட்டு வர்ரவரு. ரவுசு கேட்டு நின்னாரு, ஒரு நிமிஷம் பொழுதோட பாத்தாரு, மடார்ன்னு நடுவுல நுழைஞ்சாரு. 

"ஏனுங்கோ கண்ணு, போங்கோ — வெசனம் வேண்டாம், ஸோலியப் பாருங்கோ.அட போங்க கண்ணுங்களா அல்லாரும்!" 

வேல்முருகன் அண்ணா அலுங்காமே பைக் ஏறி கிளம்பினாரு. பழனிசாமிக்கும்: "நீயும் போ கண்ணு, ஊட்டுல உன் அம்மாயி காத்திருப்பாங்க." "அம்மாயி" சொல்லு வந்ததும் அமைதி ஆயிட்டான். வெருசா கார்ல ஏறி போயிட்டான். 

செல்லம்மாள் பாட்டி: "திருவாத்தான்!" 

நாகப்பன் அண்ணா: "போச்சாது பாட்டி, என் முப்பத்தஞ்சு தேநீரு போயிடுச்சு — நல்லாவே ஆச்சு!"

நான் நிம்பு சர்பத்து குடிச்சுட்டு கிளம்பினேன். 

ஒரு முருகேசன் அண்ணா "போங்கோ" சொல்லும்வரை நாமெல்லாம் ஒட்டுக்கா நின்னுட்டே இருப்போம் — இது கோவைதான் கண்ணுங்களா. இல்லீங்கண்ணாவும், ஆமாமுங்கோவும், தேநீரும் சேர்ந்து வாழுது இங்க. 

செய்வாகளாகும்!

सबका हमसफ़र हो जा

 किसी की सरहदों से बंध के मत रह, दिल मेरे — बेघर हो जा वो जो है सबमें, उसमें खो के अपना घर हो जा । जहाँ से आई थी वो रोशनी, उसी का हिस्सा बन ...