Saturday, April 28, 2018

வாழ்த்துகின்றேன்

வாழ்த்துகின்றேன் 
எனதுயிர் நீ என்று உணர்கின்றேன் 

போற்றுகிறேன் 
உன்னை என் கருத்தினில் காக்கின்றேன்

இனி நானோ நானில்லை
இனி இரவோ இரவில்லை 
எங்கும் உன் வாசம் தான்

***********************

பாலை வனமான என் வாழ்விலே
சோலையின் மலர் என நீயோ வந்தாய் 

புழுங்கிய ஜீவனுக்கு 
புத்துயிர் பூட்டினாய்(2)
புதுவித அனுபவம்
பூமியே சொர்கம் (2)

போதுமடி இப்பிரிவு 
என்னுடன் கலந்திடு 


        

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...