Saturday, September 4, 2021

ஆசான்கள்

 

குயவர் பட்டறையில் ஒரு  

குழந்தை உருவெடுத்தது .

கன்னி அவள் மனமே அவர்களின் 

களிமண் பாண்டம்.


கனிவும் அறனும் குயவியின் 

கருவிகளாயின.


வேளை இலா தியாகமோ குயவனின்

சூளைகள் ஆயின .   


பாடு பல பட்டு இருவரும் 

பாண்டம் என்னைப் 

படைத்தனர்.


மூப்பு காலத்தில் நான் 

முத்தாய்ப்பாய் அவர்க்கு.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...