Saturday, September 4, 2021

ஆசான்கள்

 

குயவர் பட்டறையில் ஒரு  

குழந்தை உருவெடுத்தது .

கன்னி அவள் மனமே அவர்களின் 

களிமண் பாண்டம்.


கனிவும் அறனும் குயவியின் 

கருவிகளாயின.


வேளை இலா தியாகமோ குயவனின்

சூளைகள் ஆயின .   


பாடு பல பட்டு இருவரும் 

பாண்டம் என்னைப் 

படைத்தனர்.


மூப்பு காலத்தில் நான் 

முத்தாய்ப்பாய் அவர்க்கு.

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...