Saturday, May 18, 2024

மெய்யப்பா

 


இன்றே பிறந்தாயா, மெய்யப்பா ?

என்றோ பரிச்சயம் போல, அப்பப்பா!

உன் assignment நோட்ஸ் பலரையும் 

வாழ்வித்தது என்னவோ மெய்யப்பா!


உனைக் காண்பது அரிது , ஏனில் நீ 

படையல் இருமுடி நெய்யப்பா!

உன் அறிவு கடல் ஆழம்,

உன் மனம் திசை காட்டி, அப்பப்பா!


உன் புன்னகை ஒன்றே போதும்,

உலகமே மலர, மெய்யப்பா!

-திலீப் 



 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...