Saturday, November 15, 2014

எனக்கெனப் பிறந்தவள் நீ

எனக்கெனப் பிறந்தவள் நீ, அடியே
இன்னும் எனை ஆட்கொள்வதில்
தாமதம் ஏன்.

பாவையுந்தன் கூந்தல் வாசனை வாட்டுதே
பாவையின் கூந்தலில் தொலைந்திட வேண்டும்
இனி என்ன தயக்கத் தடை, அடியே.

தேவையுந்தன் கண்ணின் கனிவான பார்வை
தேவை கண்பார்வையில் குளிர்ந்திட வேண்டும்
இனி என்ன விரக நிலை, அடியே.

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...