Sunday, January 6, 2019

முழுவொளி தோற்றம்

ஓடிப் படித்தேன் உலகியல் உணர
நீடித்திருக்கும் எனவே நினைத்தேன்
தேடிச் சுகமென கிட்டிய தெல்லாம்
வாடிப் போனது வழக்கில், கேளாய்.


பாடிய நான்மறை பலன்தர வில்லை
ஓடிய மனமோ ஓரிடத்தில் இல்லை 
நாடினேன் மௌனம் நாதா உன்னிட்டு
மூடிய விழிக்குள் முழுவொளி தோற்றம்!!     

1 comment:

Unknown said...

Beautifully written

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...