Sunday, January 6, 2019

முழுவொளி தோற்றம்

ஓடிப் படித்தேன் உலகியல் உணர
நீடித்திருக்கும் எனவே நினைத்தேன்
தேடிச் சுகமென கிட்டிய தெல்லாம்
வாடிப் போனது வழக்கில், கேளாய்.


பாடிய நான்மறை பலன்தர வில்லை
ஓடிய மனமோ ஓரிடத்தில் இல்லை 
நாடினேன் மௌனம் நாதா உன்னிட்டு
மூடிய விழிக்குள் முழுவொளி தோற்றம்!!     

1 comment:

Unknown said...

Beautifully written

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...