Saturday, February 15, 2020

காணாமல் போகுமே


கரை சேரும் பிறவிதனில்
கை சேராக் காதலினால்
நரை சேர்ந்த கர்ணமூலம்
இறை சேர்ந்த ஓரிதயம்.

பிணி சேர்ந்த இத்தேகம்
அணி சேர்ந்த என்சோகம்
பனி சேர்ந்த சிகரம்போல்
இனி காணாமல் போகுமே.
     
  

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...