Friday, January 13, 2023

பொங்கலோ பொங்கல்

 வனம் தங்கியதால் வானம் பொழிகையிலே 

மனம் நனையுது நன்றி மழையிலே.

தனம் வருகுது உழவன் கையிலே

இனம் திளைக்குது உவகையிலே.


மங்கும் ஒளியில் சொக்கப்பானை

இங்கும் அங்குமாய் மிளிர்கையிலே

எங்கும் கதிரின் அறுவடையிலே

பொங்குது மருதம் மகிழ்ச்சியிலே.


பொன்னி அரிசி மண் பானையிலே 

வெல்லத்துடன் சேர்ந்து கொதிக்கையிலே.

கரும்பும் கருத்தும் சுவைக்கையிலே 

அரும்பது புன்னகை இதழ்களிலே .










 





No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...