Monday, August 21, 2023

ஒரு சந்திர மண்டல வாசியின் பார்வை

என் தாய் அன்று

நிமலன் எனக்கு பூமியில் 

நிலாச் சோறு 

நித்தமும் 

ஊட்டியுள்ளாள்.


என் சேய் இன்று 

தன் மகளுக்கு

நிலாவிலேயே

சோறு ஊட்டுகிறாள்.

==================


நாயகியின் வதனத்தை

நிலவோடு ஒப்பிட்ட 

நம் கம்பன்களுக்கு


அவ்வதனத்தில்

கால் வைத்தால்

கோபம் வராதா?

==============


வெகு

விரைவில்

சந்திர மண்டல

வாசிகள்

பூமி கிரகணத்தைக்

கண்டு பிடிப்பர்.

===============


சந்திர திசையின்

நிலவரம் அறிய

நிலவுக்கே

வந்துள்ளார் 

சோதிடர்.

===============


சங்கடஹர 

சதுர்த்தி விரதம், இன்று.

இங்கிருந்து நான்

பூமியைக் கண்டபின்தான்

புசிப்பேன்.

===============

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...