Saturday, September 4, 2021

ஆசான்கள்

 

குயவர் பட்டறையில் ஒரு  

குழந்தை உருவெடுத்தது .

கன்னி அவள் மனமே அவர்களின் 

களிமண் பாண்டம்.


கனிவும் அறனும் குயவியின் 

கருவிகளாயின.


வேளை இலா தியாகமோ குயவனின்

சூளைகள் ஆயின .   


பாடு பல பட்டு இருவரும் 

பாண்டம் என்னைப் 

படைத்தனர்.


மூப்பு காலத்தில் நான் 

முத்தாய்ப்பாய் அவர்க்கு.

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...