Monday, May 22, 2023

உந்தன் உயிரால் நிரப்பிவிடு.

 

படுக்கையில் பதமாய்ப் படர்ந்து விடு 

கனிவாய்த் என்னைக் கவர்ந்து இழு.

எச்சில் மாற்றி உண்டு விடு - பின் 

உடைக்கு மெதுவாய் விடை கொடு

உன்னையே எனக்கு உடுத்தி விடு

வியர்வை மழையில் பயிரை இடு.

எந்தன் உயிரை உறிஞ்சி எடு

உந்தன் உயிரால் நிரப்பி விடு.


Wednesday, May 17, 2023

இரு கை வேடத்து இராகவனின் நாமம்

 

இரு கை  வேடத்து இராகவனின் நாமம்

இரு க்கையில்  எங்கும்  இனியதோர் கீதம்.

இரு கை கூப்பி இதயம் நெகிழ்ந்து நான்

இரு மாப்பெலாம் இட அவனின்  பாதம்.


உலக வாழ்க்கை எளிதாய் உய்வித்திடும் நாமம்

அலகிலாப் பிழைகளையும்  அழித்திடும் நாமம்

புல னைந்தையுமே புடம் போட்டிடும் நாமம்

கல னாதிபனின்றும் எமைக் காத்திடும் நாமம்.   


நாக்கின் நுனியில் நித்தம் நாரணன் திருமொழி 

காக்கின் வரும், கனகமும் காணியும் நம் வழி 

நோக்கின், நொடியில் மலையும் மடுவாய் மாறிவிடும்

கோர்கின், உடலும் உள்ளமும் இராம நாமத்துடனே. 


உமை யவளுக்கும் கூட உவகை அளித்த நாமம்

நமை ஆட்கொண்ட வன்மீகனின் மோகம்

தமை  சூழ் பாவமனைத்தும்  தகர்த்திடும் வேகம்    

இமைப் பொழுதில் கிடைத்திடும் மோட்ச போகம்.  


மதனின் பாணத்தையும் உடைத்திடும் நாமம்

அதனின் அழகால் அமிழ்த்திடும் நாமம்

பதமாய்ப் பாவம் அனைத்தையும் எறித்து - பல  

விதமாய் பலன் தரும் பகவனின் நாமம் .


ஆயக் காலைகள் அனைத்திற்கும் ஆசான்

தீயத் தாடகையைத் தீர்த்திட்ட தீர்க்கன் 

மாயை ஆறும் மனம் அண்ட விடாது காக்கும்

தூயவன் அவனின் தொழு நாமம் கொண்டு.



இரு கை  வேடத்து- கைகள் இரண்டிலும் யானை பலம் கொண்ட; கலனாதிபன் - யம தர்மராஜன்; வன்மீகன் - வால்மீகி முனிவர்; மாயை ஆறு - காம, குரோத,லோப, மோஹ, மத, மார்சர்யம். 





 

 

Tuesday, May 16, 2023

தடியடி தாளத் திராணியோ இல்லை

தடியடி தாளத் திராணியோ இல்லை,

கன விரைவில் வந் தெனைக் காத்திடுவாய்.


பலரும் பயனுற பணி பல புரிந்தேன்

பயம் ஏன் பரமா, பலம் நீ தருவாய். 


விரயம் இல்லா திரவிய திரட்டு

இறையன் புடனே இனிதே புரிந்தேன்.  


சாட்டை அடி இனி சகிக்கா தையா

சாகேத ராமா! அபயம் அளிப்பாய்.


உள்ளம் உருகிட உன்னுடன் உய்ந்தேன்

எள்ளளவும் இனி கவலை இல்லை.


பார்திவி மீட்டிட பாலம் அமைத்தாய்

பார் புகழ் நாதா, பார், கடைக் கண்ணால். 


எப்பொழுதும் உன் நாமம் நாவினில், 

செப்படி வித்தை செய்திட வாராய்!

தப்படியில் ஒரு தாயை உயிர்த்தாய்

அப்படியே வந் தெனை ஆட்கொள்வாய்.


Note: This poem (originally in Telugu) was penned by Bhadrachalam Ramadasu, when he was jailed for supposedly pilfering government tax money ( belonging to the Sultans) and diverting them to building temples for Rama. He was chained, flogged and put to unending torture. He believed that he only used the money, rightfully, for the right causes.  

 

உய்ந்தேன் - வாழ்ந்தேன் ; எள்ளளவும் - சிறிதும்; பார்திவி - சீதா பிராட்டிக்கு மற்றோரு பெயர்; செப்படி- magic; தப்படி- காலடி அளவு; தப்படியில் ஒரு தாயை உயிர்த்தாய் - அகலிகை மோட்சம்; இராமன் அவளை தாயாக பாவித்தான் 

Monday, May 15, 2023

கஞ்சரளத்தைக் காணாய்.

கோதாக் கரையில் கொலு வீற்றிருக்கும் 

குகனின் தமையன் குணக்குன்றவனே 

புந்தியில் சுமக்கும் புண்ணிய பூமியாம் 

கஞ்சரளத்தைக் காணாய்.


மைத்திலியும் அவள் மைத்துனனுடனும்

மாருதியம் பல வானர சேனையும்

புடைசூழ் அருளும் புருஷோத் தமனின்  

கஞ்சரளத்தைக் காணாய்.


சங்குடனே தவச் சக்கரம்  சேர்ந்திட  

திருவிளை யுடனே தரிசனம் தந்திடும்  

ஒப்பிலி அப்பனின் ஒளிரும் தலமாம்  

கஞ்சரளத்தைக் காணாய்.


பிரமிக்கமிகு மதிலும் பிராகாரங்களும் 

வியக்க வைத்திடும் விண்ணுயர் விமானமும்

கதவும் கொண்ட கரிய செம்மலின்   

கஞ்சரளத்தைக் காணாய்.


புன்னை வனமும் பொலிவைக் கூட்டிட

கிருட்டினக் கிரீடமும் கீர்த்தியைப் பாடிட 

துளசிக் கொத்தே தூரிகை ஆகிய -இராம 

கஞ்சரளத்தைக் காணாய். 


கலி  காலத்தின்  நில வைகுண்டம்,

பொலி வுடன் திகழும் புருஷோத் தமனை

விழுந்து வணங்கிட வெண்டனே வாராய் -

கஞ்சரளத்தைக் காணாய். 

 

தஞ்சம் புகுந்தாரைத் தாங்கிப் பிடித்திடும் 

இராம தாசனை இனிதே  இரட்சித்திடும்

தயரதன் மகன் இவன் தரிசனம் தந்திடும் -

கஞ்சரளத்தைக் காணாய். 



 



Saturday, May 13, 2023

எல்லாம் இராமன் மயம்

எல்லாம் இராமன் மயம் - இவ் 

உலகே உத்தமன் மயம்.


என்னுள் உறைபவன் எங்கும் பரவி

அண்டத்தையம்  ஆட்டி வைத்திட , 


எல்லாம் இராமன் மயம்.


ஆதவனும் ஆதிரையும் 

வையகமும் வான் வெளியும் 

பால் நிலவும் பாதாள உலகமும்  

நாரணன் மகன் நான்முக னுட்பட,  


 எல்லாம் இராமன் மயம்.


அரணும் அதனின் ஆறு பலவும்

குறிஞ்சியும் பின் குறு நெய்தலும்  

விலங்கினமும் வித்திட்ட கடமையும் 

நான் மறையும் நாலா யிரமும் 


எல்லாம் இராமன் மயம்.


திக்கெட்டும் தீராக் காலமும்

பரமனின் பாம்புப் படுக்கையும் 

அறவே விடத்தகு ஆறு குணமும் 

வசுக்கள் எட்டு வசம்பட நானும் 


எல்லாம் இராமன் மயம்.


தீரன் இராமதாசன் முன்வைத்த அவா 

தீர்ந்தன எல்லாமும், தீர்த்தக் கரையினிலே.   

 தாரக மந்திரம் தன்னுள் தக்கிட  

பிறவிப் பிணியோ பிறகும் வரா.


எல்லாம் இராமன் மயம்.

எல்லாம் இராமன் மயம்.


உத்தமன் - another name for Rama

ஆதிரையும் - tiruvathiraiyum ( denotes all Stars here, as well as Shiva)

 நாரணன் - Narayanan

நான்முகன் - Lord Brahma

அரண்  - Forest

குறிஞ்சி - Hills 

குறு நெய்தலும் - relatively small sandy beach

வித்திட்ட கடமை - ordained duty;

நான் மறை - Vedas

நாலா யிரமும் - 4000 Divya Prabhandams

திக்கெட்டும் - 8 dorections

தீராக் காலமும் - endless time

பரமனின் பாம்புப் படுக்கை - Adi Seshan

ஆறு குணம் - Kama, Krodha, lobha, moha, matha mathsalya

வசுக்கள் எட்டு வசம்பட நானும் - I am governed by the 8 vasus

रामचन्द्राय जनकराजजा मनोहराय

 


रामचन्द्राय जनकराजजा मनोहराय
मामकाभीष्टदाय महित मङ्गलम् ॥ पल्लवि॥

कोसलेशाय मन्दहासदासपोषणाय
वासवादि विनुत सद्वराय  मङ्गलम् ॥ १॥

चारुमेघ रूपाय  चन्दनादिचर्चिताय
हारकटकशोभिताय भूरिमङ्गलम् ॥ २॥

ललितरत्नमण्डलाय तुलसीवनमालिकाय
जलजसदृशदेहाय चारुमङ्गलम् ॥ ३॥

देवकी सुपुत्राय देवदेवोत्तमाय
भावजा गुरुवराय भव्यमङ्गलम् ॥ ४॥

पुण्डरीकाक्षाय पूर्णचन्द्र वदनाय
अण्डजा वाहनाय अतुलमङ्गलम् ॥ ५॥

विमलरूपाय विविधवेदान्तवेद्याय
सुमुखचित्तकामिताय शुभदमङ्गलम् ॥ ६॥

रामदासायमृदुल हृदयकमलवासाय
स्वामि भद्रगिरिवराय सर्वमङ्गलम् ॥ ७॥

Wednesday, May 3, 2023

श्री नृसिंह जयन्ति सुभदिने...

श्री  नृसिंह जयन्ति सुभदिने...

प्रह्लादस्य प्रियम् देवम् नमामि त्वम् श्री नृसिंहं

प्रत्यान्गिर: पतिम् श्रेष्टं वन्दे नृसिंह: श्रियम् ॥


मूर्ध सिम्हम् अर्ध मानवं पूर्ण चन्द्र: प्रसननम् 

वर्धमानम्  अर्चितायम्  स्थम्भ विस्पोटे उत्स्नायम् ॥


हिरण्यकाशिपुं सम्हारिणम् हिरण्य वर्णम् तम् प्रभुम्

नमामी योग नृसिंहं सिम्हाद्रीशाय  समन्वितम् ॥


वैशाख शुद्ध चतुर्दशाम् अध्य तव जयन्त्योत्सवम् 

यादाद्रि नाथाय शुद्धाय तव पादरविन्दम्  चरणम्  ॥


दिलीप:

  


 



How can India aspire to be a thought-leader?

Two seemly disjointed happenings triggered this article today.  One – I was walking down an old alley here in Singapore, where a signage in ...