Sunday, December 29, 2019

மதகுகள் மாறின

அன்று காலை சுப்பிரமணி மிகவும் பரபரப்பாகக் காணப்படர். எப்போதும் போல அவர் மனைவி தங்கம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து , இருட்டில் ஒரு லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டிலுக்கு சென்று "லட்சுமி " யைக் கறந்து, கொடியெடுப்பில் வெந்நீர் வைத்துவிட்டு, வறுத்து வைத்திருந்த காப்பிக் கொட்டையை அரைக்கச் சென்றிருக்க, அவர் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார்.

கொடியடுப்பில் வெந்நீர் ஒருபுறம், பால் மறுபுறம் என ஒரு பெரிய பித்தளை டம்பளர் நிறைய நுரைக்க நுரைக்க பில்டர் காபி வர, அதன் நறுமணமும் சுவையும் கட்டி இழுக்க, அவர் கவனமோ வேறு எங்கோ. அவசரமாக காபியை உள்ளே தள்ளி விட்டு, வயலை நோக்கி விரைந்தார்.

விடியற்காலை ஆதலால் வழி சரியாகப் புலப்பட வில்லை. ஆனாலும் பழகின பாதை. லாந்தர் இன்றியே விரைந்தார். தூரத்தில் எங்கோ ஒரு தோப்பில் மயில் கரைந்தது. மாடுகளை சில புலையர்கள் மேய்க்க ஆயத்தம்  ஆக, மாடுகளின் கழுத்து  மணியோசை, அக்காலை  பொழுதில் , மாரியம்மன் கோவில் மணியோசையுடன் போட்டி போட்டது. மெல்லிய ஆடி மாசக்காற்று குளத்துக்கரை பவளமல்லியின் வாசனையை சுமந்து வந்தது.

மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு lower delta எனப்படும் கீழக் காவிரி மாவாட்டப் பகுதிகளுக்கு வருவதற்கு சுமார் ஏழு நாட்கள் வரை பிடிக்கும். வீர சோழனாரு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, பாண்டவையாறு, அரசலாறு, கடுவையாறு, கோரையாறு, ஓடம்போக்கியாறு, பாமணியாறு எனக் காவிரி தாய் தன்னையே மாய்த்துக்கொண்டு பல பிரிவுகளாகி டெல்டா பகுதி மக்களுக்கு பாசனம் மூலமாக பாசத்தைக் காட்ட, அத்தண்ணீர் பட்டவாசல் வாய்க்காலுக்கு வர இன்னுமொரு ஐந்து  நாட்கள் வரை பிடிக்கும்.

அந்த ஆண்டில் மேட்டூரில் நீர் வரத்து கம்மிதான். சென்ற வாரம்தான் சுப்பிரமணி பஸ்ஸைப் பிடித்து சென்று தஞ்சையில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு வந்திருந்தார். ஆடி மாதம். குறுவை நடவு நேரம். தண்ணீர் இல்லையென்றால், மக்கள் என்னதான் செய்வார்கள்? வானம் பார்த்த பூமி அல்லவா?

அத்தண்ணீரை மதகுகளில் தேக்கி வைத்து ஒவ்வொரு நிலமாக பாசனத்திற்கு பயன் படுத்துவது வழக்கம். கிராமத்தாரின் mini dam எனப்படும்  மதகுகள் ஒவ்வொரு நிலச்சுகாந்தாரின் நிலத்திற்கு அருகிலும் மூங்கிலினால் குறுக்கும் நெடுக்குமாக வெளி போல பின்னப்பட்டு வைக்கோல் கொண்டு அடைக்கப்படுவது வழக்கம்.

அதில் நிறைய நீர் திருட்டு ( அந்த காலத்திலேயே) நடப்பது வழக்கம். அதை மேற்பார்வை இடவே இந்த விடிகாலை விரைவு வரவு, சுப்பிரமணிக்கு. யாராவது நீரை எடுத்துக்கொண்டு விட்டால், பின், பாசனத்துக்கு என்னதான் செய்வார், பாவம்? கடைசி மகள் கல்யாணம் வேறு பங்குனியில் கன்னிகாதானம் செய்தாக வேண்டுமே! நல்ல சாகுபடி இருந்தால் தான் அது சாத்தியப்படும்?

"மதகு திறக்கும் நேரம் ஆகி விட்டதே! கோவிந்தராசு வந்திருப்பானோ?"

"கும்புடுறேங்கைய்யா!" வந்து விட்டிருந்தான்.

"வா கோவித்து. இன்னிக்கி வீட்டிலையும் நெறய வேலை கெடக்கு. சம்பந்தி வராரு! இதரப்படியெல்லாம் பேசி முடிக்கணும்!பாத்திரம் பண்டம், சீர் செனத்தி , நக , வரதட்சனை ......    எல்லாம் நல்லபடியா முடியணும்! வா! வேலைய சுருக்க கவனிப்போம். "

" ஆகட்டுங்கயா!"

உடனே வாய்க்காலில் இறங்கினான். வைக்கோலை அகற்றினான். மணி அடித்தவுடன் ஆர்ப்பரித்துக்கொண்டு பள்ளிக்கூடத்தை விட்டு ஓடும் குழந்தைகளைப்போல நீர், ஒரு குதூகுலத்துடன் வரப்பைத் தாண்டி வயலுக்குள் பாய்ந்தது நீர்.

"வணக்கம் அய்யா! நல்லா இருக்கீயளா?"

குரல் கேட்டுத் திரும்பினார். சன்னமான குரலுக்குச் சொந்தக்காரர் நல்லதம்பி . பக்கத்து நிலக்காரர்.

" ஏஞ்ஜ நல்லதம்பி! என்ன காலங்கார்த்தால வயப்பக்கம்? ஒன்னோட மொற இன்னும் ரெண்டு நாளைக்கு பொறவுதானே?"

"அது வந்துங்கய்யா ....." வயதில் சிறியவரான நல்லதம்பி இழுத்தார்

" சும்மா தயங்காம சொல்லு!"

" அதுங்கய்யா...   என் சின்ன பொண்ணுக்கு ஒரு வரன் வந்து இருக்கு. அதுதான் ஒங்கள ஒரு வார்த்தை கேக்கலாம்ன்னு ... "

" அட! காலங்கார்த்தால நல்ல சமாச்சாரமா சொல்ற! ரொம்ப சந்தோசம். பையன் என்ன செய்யறான்? வெவசாயியா?"

"இல்லீங்க்யா! அவுக அய்யா எட்டுக்குடில மிராசுதார். பையன் இங்க கீவளூர்ல ஆரம்ப சுகாதார நெலயத்துல டாக்ட்டரா இருக்காருங்கயா!"

"அட்றா சக்கை! புளியங்கொம்பாதான் புடிச்சு இருக்க! ஆமா, டாக்டராச்சே! வரதட்சணை நெறய எதிர் பார்ப்பாங்களே! ரெண்டு  புருஷம் முன்னாடிதான் ஒன் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணின! எப்படி சமாளிக்கப்போற?"

" அய்யா! 4 வேலி நெலத்த நம்ம ராவுத்தருக்கு விக்கறதா ஏற்ப்பாடு. அது போக,  இந்த வருஷம் நல்ல வெளச்சல் வந்தாதான்யா....  "

"ஓ!!".......

இரண்டு நிமிஷம் மௌனம் ....  என்ன நினைத்தாரோ.........

"டேய் கோவிந்து!"

வந்தான்.

" அந்த வைக்கோல நம்ம நிலத்து பக்கம் அடைச்சு வை! தண்ணீ மொதல்ல நல்லதம்பி நெலத்துக்குப் போகட்டும்!"

" அய்யா! என்ன சொல்றீய?....   "

" செரியாத்தாண்டா சொல்லி இருக்கேன்! சொன்னத செய்டா"

மூன்று தலைமுறையாக அவர் பண்ணையில் கோவிந்துவின் குடும்பம் வேலை பார்த்து வந்தது. எதிர்ப் பேச்சு பேசி பழக்கம் இல்லை.

"ஆவட்டும்யா".

அடுத்த பட்டாவது வது நிமிடத்தில், நீர் நல்லதம்பியின் நிலத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது.

" அய்யா! ஒங்களுக்கு எப்படி தெரியும், நான் இத தான் கேப்பேன்னு?..  " நா தழுதழுத்தது , நல்லதம்பிக்கு.

"என் வீட்டிலேயும் ஒரு பொண்ணு கல்யாணதுக்கு நிக்கறா! பொண்ண பெத்தவனுனுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியாதா? இந்த கால வேளைல வேற எதுக்கு வரபோற?"

" அப்போ, நீங்க என்ன செயவீய? ஒங்க பொண்ணு கல்யாணம் பங்குனியில இல்லையா? அதே மொடை தானே உங்களுக்கும்?"

" எம்பளது வருஷத்துக்கு அப்புறம் இந்த வருஷம் கெரகம் எல்லாம் நல்லா இருக்குன்னு சோசியரு சொன்னாரு! நாட்டுல வெளச்சல் அமோகமா இருக்குமாம்!

நாம் கும்புடுற என் மாரியாத்தா கை விட மாட்டா ! ஒனக்கு குடுத்தது போக நிச்சயம் எனக்கும் குடுப்பா! என் பொண்ணு கழுத்துலேயும் நல்லபடியா தாலி ஏறும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ எதுக்கும் கவல படாம ஆகவேண்டியதப் பாரு!"

கோவிந்தராசுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "டே கோவிந்து! கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு! பணத்த எப்படி பொரட்டப் போறேனோ? தெரியல! மாரியாத்தா தான் ஒரு வழி விடணும்!" இது நடந்தது நேற்று. அட, ஒரு மணி நேரம் முன்புகூட கவலை தோய்ந்த குரலில் காரகரத்தாரே! இப்போதோ, கதையே வேறாகி விட்டதே!

ஒன்றுமே நடக்காதது போல , மற்ற வயல் வேலைகைளை கவனித்துவிட்டு திரும்பி நடந்தார், சுப்பிரமணி . இப்போது மணி காலை பத்து. காத்திருக்கும் தன் கடைக்குட்டி மகளின் முகம் கண் முன்னே வந்து போனது. மெல்ல, ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே வீடு நோக்கி நடந்தார்.

வழியில் ஆரம்பப்பள்ளி. மரத்தடியில் பிள்ளைகள், உரத்த குரலில் அவ்வையாரை அழைத்தனர்  :


“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”

*****************************************

திலீப்




Friday, December 27, 2019

लाज़मी है



आँखें हैं तो निगाह लाज़मी है
दिलदार हूँ, एक ग़ुनाह लाज़मी है।

तेरी सूरत और मेरी आँखें टकराए
तो होटों से "आह" लाज़मी है।

ख़्वाब में तेरी बाँहों में था, सनम
नींद  में भी  "वाह" लाज़मी है।

तेरी सुर्खी निशाँ अब भी मेरे सीने में
आईने के सामने तेरी चाह लाज़मी है।

Sunday, December 15, 2019

सुकूत-ए-आह


ज़माना-ए-धूल-ए-मिट्ठी अभागा
में ज़िन्दगी से काफी दूर भागा

बस, सांस लेने बैठा , और देखा
मेरे सारे कुर्ते पर दागा ही दागा

पीतल का दिया अब पीतल ही रहा
इसको अब वापिस कौन लेगा

सुकूत-ए-आह अब कानों को भर रहा है
शायद जहन्नम में ज़रूर सुकून मिलेगा

Tuesday, December 10, 2019

भूक

न फ़क़त चिरागों से जलाया जाता है 
राख-ए-ज़िन्दगी  भूख से भी  बनाया जाता है 

जिस खाने से दूर रहने के कसम खाते हो 
उसी की परछाई यादों में समाया जाता है 

चाहे जितना भी पाबंदी लगाने की कोशिश हो 
भूक से हर फ़सील को पणाया जाता है  

तालुक़ को कायम रखना है, तो पेट पूजा कर लो 
खाली पेट से अक्सर रिश्ता कटाया जाता है 

Saturday, December 7, 2019

25 காசு நாணயம்

இடம் : கண்ணகி எரித்து மிச்சம் இருந்த மதுரை
காலம் : 70கள்

சனிக்கிழமை. என்னை தேய்த்துக் குளித்திருந்தேன். ஆதலால் வெய்யிலில் கிரிக்கட் விளையாட அனுமதியில்லை .

என் வீடு ஒரு பெரிய செம்மண் திடல் முன்னே இருந்தது. மாடத்தில் இருந்து pavillion போல விளையாட்டுக்களை ரசிக்கலாம். என் ஐந்தாம் வகுப்பு சக மாணவர்கள் கிரிக்கட் விளையாட, மதுரை Melbourne ஆகி இருந்தது, என்னைப் பொறுத்த வரையில். என் pavillionநிலிருந்து ஆற்றாமையுடன் பார்த்து நொந்துபோய், வீட்டிற்க்குள் வந்தேன்.

பிரதி மதியம் வாசலில் grape ice விற்பவர் வருவது வழக்கம். அம்மாவிடம் காலையிலேயே மன்றாடி , 25 பைசா வாங்கி வைத்து இருந்தேன். ஏதோ மதுரை மாநகரத்தையே அந்த 25 பைசா கொண்டு வாங்கப்போவதாக ஒரு பெருமிதம். அது,  காலையில்.

இப்போதோ, மனமெல்லாம் விளையாட முடியாத வெறுப்பு. ஏதோ ஒரு நினைவில், 25 பைசாவை வாயில் போட்டு வெளியில் எடுத்து விளையாடிக்கொண்டு இருந்தேன்.  என்ன ஆயிற்றோ, இன்றுவரை விளங்கவில்லை. திடீரென்று பார்த்தால், 25 பைசாவாக் காணோம். சுற்றுமுற்றும் பார்த்தேன். உஹும் .

ஒரு வேளை விழுங்கி விட்டேனோ? அட! ஆமாம். அப்போதுதான் தொண்டைக்குள் ஒரு உறுத்தலை உணர்ந்தேன். ஐயோ! என்ன காரியம் செய்து விட்டேன்! தந்தையோ, ரயில்வேயில் guard வேலை. வழக்கம் போல் வெளியூர் பயணம். எப்போ வருவாரோ?

அம்மாவிடம் ஓடினேன். grape ice வாங்க 25 பைசாவுக்குக்கூட 25 முறை தயங்கும் காலம் அது.  தனியார் மருத்துவம் எல்லாம் எங்களை பொறுத்தவரையில் அப்போது எட்டாக் கனி.

அம்மா கடிந்து கொண்டாள். " ஏண்டா, இப்படி உயிர வாங்கற? அப்பா வேற ஊர்ல இல்ல. பகவானே! இப்போ என்ன பண்றது?" ஒருபுறம் கையிலோ காசில்லை. மறுபுறம் Diphtheriaவுக்கு அவளது முத்த மகளை பறிகொடுத்து இருந்த சோகம். ஒரு கணம் அவளது அவளது ஆற்றாமை அவளது நிதானத்தை வெற்றி கொண்டு இருந்தது . ஆனால், மறுகணம், திட்டிக்கொண்டே வீட்டிலிருந்த இரண்டு வாழைப்பழத்தை எண்ணையில் குளிப்பாட்டி என் வாயில் திணித்தாள். பின், அரை லிட்டர் தண்ணீர் என் பத்து வயது வயிற்றுக்குள் பத்தே நொடியில் போய் இருந்தது . சட்டெனத் தொண்டைக்குழியில் நிவாரணம்.

இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை என்பது அவளின் சிவத்த கண்கள் சொல்லின. காலை நான் எழுந்தவுடன் " டேய்! நன்னா ஆய் போடா. போயிட்டு தண்ணி விடாத. என்ன கூப்பிடு, சரியா?"

கூப்பிட்டேன்.

கையில் விளக்கமாற்றுக்  குச்சியடன் கழிவறையில் நுழைந்தாள்.  இந்த உலகத்தில் அது வரைக்கும் அத்தனை எதிர்பார்ப்புடன் மலத்தை யாரும் கிளறி இருக்க மாட்டார்கள். தங்கச்சுரங்கத்தில் பாறைகளை பிரித்துத் தங்கம் எடுத்தாள். அந்த நிமிடத்தில் அந்த 25 காசு நாணயம் 25 பவுன் தங்க நாணயமாக மாறி இருந்தது.

அம்மாவின் முகத்தில் நிம்மதி ரேகைகள் டிஸ்கோ ஆடின. என் பிஞ்சு மனதிலோ அவளின் நேற்றைய கோபக்கனலும் இன்றைய டிஸ்கோவும் மாறி மாறி  காட்சி அளித்தன. " தெரியாம தானே தப்பு பண்ணினேன். அதுக்கு போயி இவ்வளவு திட்டா? நேத்திக்கு அவ்வளவு வசவு ! இன்னிக்கிமட்டும் என்ன சந்தோஷம்? வர வர அம்மாவுக்கு என்ன கண்டாலே புடிக்கல!"

Trolley Forward!!!

*******************************

இடம் : சிங்கப்பூர். என் வீடு
காலம் : 2019 . இன்று

மணி அடித்தது . அம்மாதான். அன்று தங்கத்தைப் பிரித்து எடுத்த கைகள் காலத்தின் கோலத்தால் செயல் இழந்து இருந்தன, பக்கவாதத்தால். கண்களும் பார்வை இழந்து இருந்தன. அவள் படுக்கையில் கூப்பிட வைத்திருந்த மணி வழக்கத்துக்கு மாறாக இன்று நான் சென்று பார்ப்பதற்குள் இரண்டாம் மறுமுறையும் அடித்தாகிவிட்ட்து. ஏதோ பிரச்சனை போலும்.

ஓடிச்சென்று பார்த்தேன் . மோதிர விரலைப் பிடித்துக்கொண்டு சன்னமான குரலில் " டேய்! டேபிள் மேல இருந்த மோதிரத்த  தப்பான வெரல்ல போட்டுண்டுட்டேண்டா! கழட்ட முடியல. என்னன்னு பாருடா!"

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருந்த கைகள். உணர்ச்சியே இல்லை. கண் தெரியாதனால் மோதிரம் நடு விரலில் தவறாகத் தஞ்சம் புகுந்து இருந்தது. சின்ன சைஸ் மோதிரம் அந்த நடு விரலை நெருக்கி, இரத்த ஓட்டம் இல்லாமல் விரல் வீங்கிப்போய் இருந்தது. மோதிரமோ மோகம் கொண்டு விரலை விட்டு விலக மறுத்தது . அவளுக்கு ஒரு புறம் வலியினால் வேதனை. மறுபுறம் முதுமைக்கே உரிய இனம் புரியாத ஒரு பயம்.

என் உடம்பு சில நாட்களாக என்னுடன் அக்கப்போர் செய்து கொண்டு இருந்தது ( அம்மாவுக்கு இந்த விஷயம் நான் சொல்லவே இல்லை, அனாவசியமாக கவலைப்படுவாள்) . டாக்டரைப் பார்க்கக் கிளம்பிக்கொண்டு இருந்த நேரம், இச்சம்பவம். எனக்கோ கோபம் தலைக்கேறியது. அம்மாவை இந்த நிலையில் விட்டு விட்டு நான் டாக்டர் அப்பாயிண்ட்மெண்டுக்கு எப்படிச் செல்ல முடியும்?

"ஏம்மா என் உயிர வாங்கற? அந்த மோதிரம் வேண்டாம்னு சொன்னேனே, கேட்டியா? இப்போ பார். சோப்பு போட்டு கழட்டப்பார்த்தாலும் முடியல. கட் பண்ண என் கிட்ட ஒண்ணும் இல்ல. ஏம்மா படுத்தற?!"

பாவமாய் என்னைப் பார்த்தாள்.

"டேய்! வந்த சொற்ப வருமானத்துல உன்னையும் உங்க அண்ணனையும் வளர்த்து ஆளாக்கர்துலேயே செலவு ஆயிடுத்துடா. உங்க அப்பாவால எனக்காக ரெண்டே ரெண்டு நகைத்தான் பண்ணி போட முடிஞ்சுதுடா. ஒண்ணு- செயின். ஒங்க அண்ணன் பாங்க் லாக்கர்ல இப்போ தூங்கறது. ரெண்டு- இந்த மோதிரம். இது  ஒண்னு தாண்டா அவர் நினைவா என் கிட்ட இருக்கு. இன்னிக்கி அவர் ஞாபகம் ரொம்ப வந்துதுடா... அதுதான்......... " காண இயலா அந்தக் கண்களில் செம்பரம்பாக்கம் ஏறி.

மறுகணம், என் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கான்சல் ஆனது.

போனைக்கொண்டு பிறரிடம் பேசும் காலம் போய் போனிடமே பேசும் காலம் இது.  " Google, show me goldsmiths in Singapore".

சுந்தர் பிச்சை உடனே பிச்சை போட்டார்.  அடுத்த அரை மணியில் தட்டான் தட்டாமல் மோதிரத்தை லாவகமாக வெட்டி எடுத்தார்.

அன்று நான் பார்த்த நிம்மதி ரேகை இப்போது மறுபடியும் அம்மாவின் முகத்தில் டிஸ்கோ ஆடியது ( காலத்திற்கு ஏற்ப அவள் தன்னை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டாள். இன்னும் டிஸ்கோதான்).

வழக்கம்போல என் மனதில் கோபமும் வெறுப்பும் மாறி மாறி zoom-in, zoom-out செய்து கொண்டு இருந்தன. "சே! இனிமே டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் திருப்பி எப்போ கிடைக்கும்? கெடச்சத நழுவிடும்படி ஆயிடுத்தே! அப்படி என்ன இந்த வயதில் , கண்ணும் தெரியாமல், அந்த மோதிரத்தின் மேல் மோகம்?" அம்மா செய்த சிறு தவறு வாமனின் மூன்றாவது அடி போல என் தலையை அழுத்திக்கொண்டு இருந்தது.

ஒரு கணம்தான். ஒரே கணம் தான். மேற்கூறிய 70களின் சம்பவம் என் கண் முன்னே நிழல் ஆடியது.

அன்று அவள் காட்டிய கோபத்தின் அர்த்தம் இந்த நிமிடத்தில் எனக்கு உறைத்தது. ஆனால்...   ஆனால்...    தங்கம் திரட்டிய பின் அவள் முகத்தின் நிம்மதி ரேகைகள்? என் முகத்தில் வர மறுத்தனவே! ஏன்? ஏன்?

அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன். இந்த நேரத்திலும் - அவளின் வலி தொலைந்து போனதை விட, என் வலியே எனக்குப் பிரதானமாகப் பட்டது. அதனால் தான் என் ஆத்திரம் இன்னும் தணிந்த பாடு இல்லை.

ஆனால், அவளோ? காசை நான் விழுங்கியிருந்த அப்போதும் - நான் மட்டும் தான் அவளின் கவனம் எல்லாம். இரவு முழுவதும் விழித்து இருந்து அந்த 25 பைசாவை மலத்திலிருந்து மீட்டு எடுத்தபோதும், அவளுக்கு தன்னைப்பற்றி ஒரு பொருட்டும்  இல்லை. அப்போதும் நான் தான் அவள் உலகம்.

தன்னிகர் இல்லாத் தாய் மனம் முன் தனயன் நான் எம்மாத்திரம்?

சக்கர நாற்காலியில், விரலை விட்டு மோதிரம் விலகிய சந்தோஷத்தில் மெல்ல முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள்- "காப்பி"யில்.

"சின்னஞ்சிறு கிளியே, செல்லம்மா
செல்வக் களஞ்சியமே!"

(பி.கு .: என் தாயின் பெயர் செல்லம்மாள்) 

- திலீப் -















  

Tuesday, December 3, 2019

The mirror image

I admonished him no end
He tried his best to defend

Told him to stop looking like a clown
Criticised him, till he broke down.

Ripped the hapless boy apart
That came easily, like folk art

When I was done, to my heart's content,
I left the mirror, as if in atonement.




Monday, December 2, 2019

कट्टी में

बचपन की हरकतें बहुत थे, घुट्टी में
सारी दुनियाँ गिरा, दोस्त की कट्टी में।
लेकिन उसीसे फिर एक ही मुस्कान,
बस दुनिया वापस अपनी मुट्ठी में।

रिश्ते बनना और बिगड़ना दुनिया की रीत है
यारों ने खूब सीखा दिया, छुट्टी में।

वह लापर्वाही लम्हें लहराते हैं, राशिद 
तफली की सारी खुशियां जुटठी  में। 

How can India aspire to be a thought-leader?

Two seemly disjointed happenings triggered this article today.  One – I was walking down an old alley here in Singapore, where a signage in ...