Monday, July 29, 2013

கவிஞனின் ஜீவநதி


ஒர்நிலையும் நிலைத்திராமல்
மனவுளைச்சல் வாட்டிவிடும்
நேர்மதியோ வேலைசெய்து
நின்றுபல நாளிருக்கும்.

உடைத்துணரும் பகுத்தறிவும்
உண்டோ என வியக்கவைக்கும்
மடைதிறந்த வெள்ளமென
மனப்புனலில் நீர்ச்சொரியும்

மையலுக்குக்  கோயில்கட்ட
ஆகமமோ அடுத்துவரும்
அய்யனவன் அருளுக்காக
பாக்கள்பல எடுத்துத்தரும்

உலகமிதை மடமையென
ஒதுக்கிவிடத் துணிந்துவிடும்
உலகமொதுக்கிய மையலெனைக்
கவிஞனாக  ஆக்கிவிடும்
❣D❣

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...