Wednesday, June 12, 2013

மாய மோகம்



ஆழ்ந்திருக்கும் உறக்கத்தில்
தாழ்ந்திருக்கும் உத்வேகம்
விழித்திருக்கும் காமத்தில்
வீழ்ந்திருக்கும் விவேகம்.

நெகிழ்ந்திருக்கும் உணர்ச்சிகளோ
உமிழ்ந்திருக்கும் ஊழ்வினையை
வாழ்ந்திருக்கும் தர்மநெறியோ
உழண்டிருக்கும்  சங்கடத்தில்

மகிழ்ந்திருக்கும் மதியினிலே
சேர்ந்திருக்கும் சிற்றின்பம்
புகழ்ந்திருக்கும் திருநாமத்தால்
திகழ்ந்தோங்கும் பேரின்பம்.

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...