Wednesday, June 12, 2013

கானல் நீர்




மடமையினால் மாயையினால்
உடமையென ஆக்கிக்கொண்டேன்
மூத்தோர் சொல் கேளாமல்
மூடுபனியில் முடங்கிவிட்டேன்

புறஅறிவுப் பிழையாலே
பாசவலைப் பிரதிபிம்பம்
தெரிந்ததாலே தெரியவில்லை
பிரம்மம் எனும் பேரின்பம்

இவ்வுலக பந்தத்தினை
ஈசனவன் போக்கட்டும்
இருள்சூழ் ஆத்மாவினை
அருள் ஒளி ஆக்ரமிக்கட்டும்



No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...