Wednesday, June 12, 2013

கானல் நீர்




மடமையினால் மாயையினால்
உடமையென ஆக்கிக்கொண்டேன்
மூத்தோர் சொல் கேளாமல்
மூடுபனியில் முடங்கிவிட்டேன்

புறஅறிவுப் பிழையாலே
பாசவலைப் பிரதிபிம்பம்
தெரிந்ததாலே தெரியவில்லை
பிரம்மம் எனும் பேரின்பம்

இவ்வுலக பந்தத்தினை
ஈசனவன் போக்கட்டும்
இருள்சூழ் ஆத்மாவினை
அருள் ஒளி ஆக்ரமிக்கட்டும்



No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...