Thursday, September 10, 2015

பகுத்தறிவு

என் நண்பன் வினவினான்
==================
பகுக்கும் அறிவின் துணைக்கொண்டு - ஆய்ந்து
தொகுத்த முடிவின் பயன்கண்டு - பார்
வகுத்த நெறிதம் மகிழ்ந்திட்டால் - பாழ்
மதத்தால் வருமோ பயன் ?


என் பதிலோ இப்படி
==================
அறிவுக்கு அப்பாலே ஆண்டவன் - அவனை
அறிவது பகுத்தலால் ஆகாது - எனவே
நெறியிற் கடந்து உணர்வோம் - அது
அறிவும் மதமும் அறியாதது.

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...