Sunday, July 6, 2025

கரை தேடும் நதி

 கரை தேடும் நதி போலே என் நெஞ்சம்,

கரையாச் சுமையில் காணும் வஞ்சம்.

மருந்தான நேரம் காயமாய்ப் போனதே,

மலராத காலம் மாயமாய் மறையுதே.


மின்னல் போலே கனவுகள் பிளந்தன,

இன்னல் பேணவே இரவைத் துளைத்தன.

மரக் கிளையோ  கலங்குது தூறலில்,

மனமோ மருகுது சோகச் சாரலில் .


இரத்தம் போல நேரம் இழைகிறது,

இருட் சுவடு நெஞ்சில் விழைகிறது.

கரை தேடும் நதி போலே என் உள்ளம்,

கவிதை எழுதும் கண்ணீரின் வெள்ளம்.

No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...