Sunday, July 6, 2025

முகத்தில் தூசி

முகத்தில் தூசிகள் நின்றன சுமையாய்,

முனைந்து கண்ணாடி துடைத்தேன்!

என் மங்கிய வதனம் பார்த்தேன்,

எதிரியாய் கண்ணாடி கண்டேன்!


உணர்ந்த பின் தான் உருக்கம் வருகின்றது,

உறங்கும் உண்மை விழிக்கிறது.

என் தவறே என் பார்வையின் பிழை;

தூசியில் இல்லை, என் பார்வையில் மழை! 



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...