Sunday, July 6, 2025

முகத்தில் தூசி

முகத்தில் தூசிகள் நின்றன சுமையாய்,

முனைந்து கண்ணாடி துடைத்தேன்!

என் மங்கிய வதனம் பார்த்தேன்,

எதிரியாய் கண்ணாடி கண்டேன்!


உணர்ந்த பின் தான் உருக்கம் வருகின்றது,

உறங்கும் உண்மை விழிக்கிறது.

என் தவறே என் பார்வையின் பிழை;

தூசியில் இல்லை, என் பார்வையில் மழை! 



No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...