Sunday, May 16, 2021

ஆதி சங்கரா!!

ஆதி சங்கரா!!
==========

காலடியில் கால் வைத்து எமக்கெல்லாம்

நாலடியில் பல நாமம் தந்தாய் - சங்கரா.

நீரடியில் நின்றும் தாகம் தீரா எமக்கு 

நிழலடி யாய் நின்று நெகிழ வைத்தாய் .


ஓரடியில் உலகளந்த வாமனன் பூமியில்

தேரடியில் உறங்கும் தேர் போல் அல்லா - குரு 

தாழடியில்  தஞ்சம் புகுந்திட, பல ஊர் 

காலடியில் கடந்து நீயே சென்றாய் .


மண்ணடியில் மாய்ந்து மறையும்  முன்னே 

விண்ணடியில் நீங்கிலா இடம் கொண்டாய்.

தன்னடியார்க்கு அருளும் காமாட்சியின் 

பொன்னடியில் எமக்கும் இடம் வகுத்தாய்.

-திலீப்- 

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...