Saturday, May 3, 2025

குஷ்பு


காணும் விழியில் கரையுது நெஞ்சம்,

பாணி மிகுந்த பரிமள வாசம்,

மாணிக்கக் காயம் மயக்கும் நடை,

பூங்கொன்றை சாயல் புரட்டும் நகை.


சங்கதி யெல்லாம் சினிமா அழகு,

அங்க மெல்லாமோ அதீத அழகு ,

தங்க மேனியின் தகிப்பொரு அழகு -அவள் 

சிங்கார கீதமோ சொல்லுக் கழகு .


திருச்சியில் சிலரோ திருக்கோவில் எழுப்ப,

திரு மேனி பேரில் வேள்வி நடத்திட,

குடமுழுக்கு கண்ட குஷ்புவே  - நீ 

இடம் கொண்டாய் இராமன் இதயத்தில் (!!)



No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...