Saturday, October 5, 2013

சீவன்


வாழ்ந்திருக்கும் காலம் மனதில் நீ
ஆழ்ந்திருக்கும் சித்தக் கருத்தில் நீ
விழித்திருக்கும் போதும் கனவில் நீ
வீழ்ந்திருக்கும் போதும் சீவனில் நீ.

இதமாய்ப் பல  இன்சொல் பேசியும்
நிதமாய் அமைதி நிலைக்கா ததேன்?
பனித்த கண்கள் பரிபாஷைப் பகிர்ந்தும்
கனிந்த மனமோ கிட்டாததேன்?
❣D❣



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...