Saturday, October 5, 2013

சீவன்


வாழ்ந்திருக்கும் காலம் மனதில் நீ
ஆழ்ந்திருக்கும் சித்தக் கருத்தில் நீ
விழித்திருக்கும் போதும் கனவில் நீ
வீழ்ந்திருக்கும் போதும் சீவனில் நீ.

இதமாய்ப் பல  இன்சொல் பேசியும்
நிதமாய் அமைதி நிலைக்கா ததேன்?
பனித்த கண்கள் பரிபாஷைப் பகிர்ந்தும்
கனிந்த மனமோ கிட்டாததேன்?
❣D❣



No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...