வாழ்ந்திருக்கும் காலம் மனதில் நீ
ஆழ்ந்திருக்கும் சித்தக் கருத்தில் நீ
விழித்திருக்கும் போதும் கனவில் நீ
வீழ்ந்திருக்கும் போதும் சீவனில் நீ.
இதமாய்ப் பல இன்சொல் பேசியும்
நிதமாய் அமைதி நிலைக்கா ததேன்?
பனித்த கண்கள் பரிபாஷைப் பகிர்ந்தும்
கனிந்த மனமோ கிட்டாததேன்?
❣D❣
No comments:
Post a Comment