Saturday, October 26, 2013

வித்தாய் விதைத்தாய்


இத்தாய் மண்ணின் மைந்தன் ஆயினும்
சத்தாய்ச் சாய்ந்தாய் பணத்தின் தோளில்
மத்தாய் ஆகியே வெண்ணை திரட்ட
முத்தாய்ப் பொன்றை முன்மொழின் திட்டாய்

எத்தாய் உன்னை உய்வித் தாளோ
பித்தாய்த் திரிந்தாய் பதராய்ப் போனாய்
முத்தாய்க் கிட்டிய மானிடப் பிறவி
வெத்தாய் வெஃகல் அழிக்க விட்டாய்

வித்தாய் விதைத்தாய் நஞ்சை நிலத்தில்
கொத்தாய் அறுத்தாய் குறுவை அதனில்
சொத்தாய்ச் சேர்த்தாய்ச் சொந்தம் புகழ
செத்தாய் உரமாய் ஆனாய் விதைக்கு.

❣D❣


வெஃகல் = Greed, avarice

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...