Friday, June 12, 2020

உள்ளன

உன் வாய் எனை நிந்தித்தாலும்
கண்களில் காதை பல உள்ளன. 

என் வரிகளின் அங்க அடையாளம்
இன்றும் உன் மூச்சில் உள்ளன.

என்றோ என்னை நீ நிராகரித்த
நிமிடங்கள் நினைவில் உள்ளன.

இன்றும் உன் மாளிகை வாசலில்
என் காலடித் தடங்கள் உள்ளன.

பூட்டிய கோவில் மதில் சுவற்றில்
செதுக்கிய நம் பெயர்கள் உள்ளன.

வாட்டியது போதும், திரும்பி வா
எஞ்சிய நாட்கள் சிலவே உள்ளன.

Dilip








No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...