Friday, June 12, 2020

உள்ளன

உன் வாய் எனை நிந்தித்தாலும்
கண்களில் காதை பல உள்ளன. 

என் வரிகளின் அங்க அடையாளம்
இன்றும் உன் மூச்சில் உள்ளன.

என்றோ என்னை நீ நிராகரித்த
நிமிடங்கள் நினைவில் உள்ளன.

இன்றும் உன் மாளிகை வாசலில்
என் காலடித் தடங்கள் உள்ளன.

பூட்டிய கோவில் மதில் சுவற்றில்
செதுக்கிய நம் பெயர்கள் உள்ளன.

வாட்டியது போதும், திரும்பி வா
எஞ்சிய நாட்கள் சிலவே உள்ளன.

Dilip








No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...