Friday, June 12, 2020

உள்ளன

உன் வாய் எனை நிந்தித்தாலும்
கண்களில் காதை பல உள்ளன. 

என் வரிகளின் அங்க அடையாளம்
இன்றும் உன் மூச்சில் உள்ளன.

என்றோ என்னை நீ நிராகரித்த
நிமிடங்கள் நினைவில் உள்ளன.

இன்றும் உன் மாளிகை வாசலில்
என் காலடித் தடங்கள் உள்ளன.

பூட்டிய கோவில் மதில் சுவற்றில்
செதுக்கிய நம் பெயர்கள் உள்ளன.

வாட்டியது போதும், திரும்பி வா
எஞ்சிய நாட்கள் சிலவே உள்ளன.

Dilip








No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...