Saturday, September 19, 2020

தனிமை

 தனிமைமேல் எனக்கொரு

தனிப் பிரியம்.

மனதைப் புண் படுத்த 

மற்ற எவரும் இல்லை, அங்கே.


ஏகாந்தத்தின் சுகம், வேறு 

ஏதொரு பொருளிலும் இல்லை.

எவரிடமும் ஏமாற 

ஏது சாத்தியம், அங்கே .


தானே தனக்கு நண்பன்

தலையைக் கோதும் தனயன்

தனிவழி தகுமே எனக்கு,

தனிசுகம் தெரியுது, அங்கே. 


  





 

No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...