Saturday, September 19, 2020

தனிமை

 தனிமைமேல் எனக்கொரு

தனிப் பிரியம்.

மனதைப் புண் படுத்த 

மற்ற எவரும் இல்லை, அங்கே.


ஏகாந்தத்தின் சுகம், வேறு 

ஏதொரு பொருளிலும் இல்லை.

எவரிடமும் ஏமாற 

ஏது சாத்தியம், அங்கே .


தானே தனக்கு நண்பன்

தலையைக் கோதும் தனயன்

தனிவழி தகுமே எனக்கு,

தனிசுகம் தெரியுது, அங்கே. 


  





 

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...