Saturday, September 19, 2020

தனிமை

 தனிமைமேல் எனக்கொரு

தனிப் பிரியம்.

மனதைப் புண் படுத்த 

மற்ற எவரும் இல்லை, அங்கே.


ஏகாந்தத்தின் சுகம், வேறு 

ஏதொரு பொருளிலும் இல்லை.

எவரிடமும் ஏமாற 

ஏது சாத்தியம், அங்கே .


தானே தனக்கு நண்பன்

தலையைக் கோதும் தனயன்

தனிவழி தகுமே எனக்கு,

தனிசுகம் தெரியுது, அங்கே. 


  





 

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...