Friday, September 25, 2020

பாலு, ஏனிந்த அவசரம்?

 பாலும் பழமும் எமக்கெல்லாம் 

குரல் மூலம் கொடுத்திட்டாய்.

அகமும் புறமும் எமையெல்லாம்

ஆழ் இசையில் நனைத்திட்டாய் .

 

பரந்தாமன் நாரதருக்கு 

பெரு விடுப்புக் 

கொடுத்துவிட்டானோ?- அதனால் 

தேவ கானம் இசைக்க உன்னை 

வைகுண்டத்துக்கே 

வரவழித்து விட்டானோ?


நாலு பேருக்கு நல்லது செய்ய 

நாளென்றும் நினைத்த நீ- இன்று 

நாலு பேருக்கு வேலை வைத்துவிடடாய்.

பாலு, ஏனிந்த அவசரம்?





 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...