காணும் விழியில் கரையுது நெஞ்சம்,
பாணி மிகுந்த பரிமள வாசம்,
மாணிக்கக் காயம் மயக்கும் நடை,
பூங்கொன்றை சாயல் புரட்டும் நகை.
சங்கதி யெல்லாம் சினிமா அழகு,
அங்க மெல்லாமோ அதீத அழகு ,
தங்க மேனியின் தகிப்பொரு அழகு -அவள்
சிங்கார கீதமோ சொல்லுக் கழகு .
திருச்சியில் சிலரோ திருக்கோவில் எழுப்ப,
திரு மேனி பேரில் வேள்வி நடத்திட,
குடமுழுக்கு கண்ட குஷ்புவே - நீ
இடம் கொண்டாய் இராமன் இதயத்தில் (!!)
No comments:
Post a Comment