Saturday, May 3, 2025

குஷ்பு


காணும் விழியில் கரையுது நெஞ்சம்,

பாணி மிகுந்த பரிமள வாசம்,

மாணிக்கக் காயம் மயக்கும் நடை,

பூங்கொன்றை சாயல் புரட்டும் நகை.


சங்கதி யெல்லாம் சினிமா அழகு,

அங்க மெல்லாமோ அதீத அழகு ,

தங்க மேனியின் தகிப்பொரு அழகு -அவள் 

சிங்கார கீதமோ சொல்லுக் கழகு .


திருச்சியில் சிலரோ திருக்கோவில் எழுப்ப,

திரு மேனி பேரில் வேள்வி நடத்திட,

குடமுழுக்கு கண்ட குஷ்புவே  - நீ 

இடம் கொண்டாய் இராமன் இதயத்தில் (!!)



No comments:

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி  கரீட்டா  எந்திரிச்சு வந்து, படிக்கிற பசங்களுக்கு லைட்ட  பாஸ் பண்ணி  பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ. தேவருங்க எல்லாம் ஒன்ன பா...