Thursday, May 8, 2025

வந்தே வீரா!!!

மழை பெய்ய, மண் நெகிழ,

மக்கள் கண்ணீர் மல்கினால் –

வருவர் வேகமாய் – வீரரவர்!

மழலை (கிணற்றில்) விழ, நாடு நெளிய,

மண் நடுங்கயிலே வருவர் - தேவரவர்!


நிழல் போலே நாடு காப்போர்,

நிஜம் போலே நின்றிடுவோர் –

நித்தம் உயிரைபி பணயம் வைக்க

சித்தம் கொண்டு சென்றிடுவோர்.


போர் வந்தால், போர் புரிவர்,

"போது" என்றால், பாய்ந்து செல்வர்,

படைக்கு ஆவியை அப்பணித்தோர்க்கு  –

புகழாரம் கூட கூடாதோ ?


ரிப்பன் வெட்ட – நடிகர் வருவர், (அ) 

ரங்கம் ஏற – அரசர் வருவர்,

ரத்தம் சிந்தும் வீரனுக்கோ - இங்கு 

ராகம் பாட ஆளில்லை!


இனியும்  விழா என்றால் –

வீரனையே அழைக்க வேண்டும்!

இனியும் வாழ்த்து என்றால் – அவன் 

நெஞ்சையே  நிறைக்க வேண்டும்!


போர் மேடை கண்டவனுக்கே இனி 

ஊர் மேடை யை உய்விப்போம்! 

புகழ் மேடை உச்சியிலே - அவனை

தூக்கிவிட்டு அழகு பார்ப்போம் !



No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...