Saturday, May 9, 2020

நிலவு

மூழ்கடலின் முடுக்குகளில் தினம்
முத்துக் குளிக்கும் முழு நிலவு .

முகிலின் வெண் பட்டுத் தூளியில்
அகிலம் மறந்து உறங்கும் நிலவு.

கடல்  நீரைக் கண்ணாடியாகிக்
காதலனைக் கண்டிடும் நிலவு.

மலையின் தோளில் தலை சாய்த்து
பலப் பல கனாக் காணும் நிலவு.

நினைவுகளின் நெரிசல்களிலும்
தனித்தே நடை பயிலும் நிலவு.

அது முகமா, இல்லை ஒளிப்பிழம்பா
ஆதவனின் நிழலன்றோ அரு நிலவு.

இரவின் மடியில் தலை வைத்து
இதமாக உறங்கும் என் நிலவு.

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...