Saturday, May 15, 2021

பாசத்திற்கும் கொள்ளி

தை யலாள் தலைவனைத் தேற்றிடத் தவிக்க

வை த்தியரோ வழியின்றி கை விரித்திட

மை தானத்தில் உடல் ஒக்கி விழிந்திட

வை யகத்தில் உயிரொன்று குறைந்ததுவே.


ஐ ம்பூதக் கூறுகளும் அழியும் நேரமிது

மை தீட்டிய கண்கள் கரையும் காலமிது

கை கூப்பி ஊரார் விடை கொடுக்க, காட்டில்

வை த்தார் உடலோடு பாசத்திற்கும் கொள்ளி.

   

Dilip 

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...