Sunday, May 16, 2021

ஆதி சங்கரா!!

ஆதி சங்கரா!!
==========

காலடியில் கால் வைத்து எமக்கெல்லாம்

நாலடியில் பல நாமம் தந்தாய் - சங்கரா.

நீரடியில் நின்றும் தாகம் தீரா எமக்கு 

நிழலடி யாய் நின்று நெகிழ வைத்தாய் .


ஓரடியில் உலகளந்த வாமனன் பூமியில்

தேரடியில் உறங்கும் தேர் போல் அல்லா - குரு 

தாழடியில்  தஞ்சம் புகுந்திட, பல ஊர் 

காலடியில் கடந்து நீயே சென்றாய் .


மண்ணடியில் மாய்ந்து மறையும்  முன்னே 

விண்ணடியில் நீங்கிலா இடம் கொண்டாய்.

தன்னடியார்க்கு அருளும் காமாட்சியின் 

பொன்னடியில் எமக்கும் இடம் வகுத்தாய்.

-திலீப்- 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...