Saturday, May 22, 2021

இன்சொல்

காற்றிற்குத் தெரியாது - தீயை ஊதினால் 

காடே எரிந்து சாம்பலாகும் என்று.


பெருமழைக்குத் தெரியாது - வெள்ளத்தால் 

பெருந் சேதம் விளையும் என்று.


நுணலுக்குத் தெரியாது - தன் குரலால் 

அரவத்திற்கு அழைப்பு விடுகிறோமென்று.


மனிதன் நாக்கும் அறியுமோ - மற்றவர் 

மனதை ரணமாக்குகிறோமென்று?


-திலீப்-


நுணல் - frog 

அரவம்- snake 

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...