Saturday, November 15, 2014

எனக்கெனப் பிறந்தவள் நீ

எனக்கெனப் பிறந்தவள் நீ, அடியே
இன்னும் எனை ஆட்கொள்வதில்
தாமதம் ஏன்.

பாவையுந்தன் கூந்தல் வாசனை வாட்டுதே
பாவையின் கூந்தலில் தொலைந்திட வேண்டும்
இனி என்ன தயக்கத் தடை, அடியே.

தேவையுந்தன் கண்ணின் கனிவான பார்வை
தேவை கண்பார்வையில் குளிர்ந்திட வேண்டும்
இனி என்ன விரக நிலை, அடியே.

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...