Friday, October 18, 2024

தெய்வீக மகவே!

 கரு சுமந்து காலம் கழித்த கருணை மூர்த்தி

உரு கொண்ட உன்னத உணர்வின் ஊற்றே

பெரு வலியால் பெற்றெடுத்த பேரன்பின் கனியே

திரு மடியில் தவழ்ந்தெழுந்த தெய்வீக மகவே!


குரு மனையில் குடியேறி குவலயத்தை மறந்து

வரு கனவில் வானவர்போல் வந்து நின்று அழைத்தாய்

திரு முகத்தில் கண்ணீரால் திளைத்தழுத போதில்

பெரு வணக்கம் பெற்றோர்க்குப் பேணிச் செய்குவேனே!


அருள் தந்த அன்னையர்க்கு ஆற்றிடா கடனை

பொருள் கொண்டு போற்றவில்லை புண்ணிய நீரால்

மருள் தீர்க்கும் மந்திரமும் மறந்துவிட்டேன் நானே

இருள் சூழும் வேளையிலே எந்தாய்! காத்தருள்வாய்!

No comments:

Tariff-trums

I woke up to the US Supreme Court gutting the Trump tariffs. Frankly, the odds were always 50–50. Now that the hammer has dropped, here are ...