Wednesday, November 26, 2025

எப்படி?


அன்பின் நெறியை நான் ஆற்றிக் காப்பது எப்படி?

அங்கும் இங்கும் நெருப்பு—இதயத்தைக் காப்பது எப்படி?


இதயம் போகும் பாதையில்  எழும் இடி சுவர்கள்—

இவற்றை இடிக்க தைரியம் வரவழைப்பது  எப்படி?


துயரில் திளைக்கும் ஆயிரம் பாடல்கள் உள்ளே உள்ளது,

துடித்துச் சிதைந்த யாழை—தொட்டு இசைப்பது எப்படி?


வலம்  வரும் நினைவுகள் சுமை என்றால் சுமக்கலாம்,

வாழ்வே சுமையாக நின்றால்—நான் தாங்குவது எப்படி?


அன்பின் நெறியை நான் ஆற்றிக் காக்க ஆசை தான்,

ஆனால் இந்த உலகில் அதை நிறைவேற்றுவது  எப்படி?

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...