Wednesday, November 26, 2025

எப்படி?


அன்பின் நெறியை நான் ஆற்றிக் காப்பது எப்படி?

அங்கும் இங்கும் நெருப்பு—இதயத்தைக் காப்பது எப்படி?


இதயம் போகும் பாதையில்  எழும் இடி சுவர்கள்—

இவற்றை இடிக்க தைரியம் வரவழைப்பது  எப்படி?


துயரில் திளைக்கும் ஆயிரம் பாடல்கள் உள்ளே உள்ளது,

துடித்துச் சிதைந்த யாழை—தொட்டு இசைப்பது எப்படி?


வலம்  வரும் நினைவுகள் சுமை என்றால் சுமக்கலாம்,

வாழ்வே சுமையாக நின்றால்—நான் தாங்குவது எப்படி?


அன்பின் நெறியை நான் ஆற்றிக் காக்க ஆசை தான்,

ஆனால் இந்த உலகில் அதை நிறைவேற்றுவது  எப்படி?

No comments:

பீட்டர் பாண்டியன்

மதுரை மாநகரம். மாலை சூரியனின் ஒளியில் கரைந்து கொண்டிருந்தது. மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரமான கோபுரம் வானம் நோக்கி வளர்ந்து நிற்க, அதன் மு...