Saturday, November 29, 2025

படைப்பின் பெருமை

 பாலைவனத்தைப் பார்த்தாலும் பூஞ்சோலை என்று சொல்லிடுவேன்!

பாடல் ஒன்று எழுதிடவே பேனா தானே எழுந்திடுமே!

காலம் எல்லாம் கடந்தோடிக் கற்பனையால் மாற்றிடுவேன்!

கண்ணில் தெரியும் வறட்சியையே கனிந்த தோட்டமாய்ப் படைப்பேனே!


நீரை எடுத்து மதுவாக்கி நிறைவான பாட்டு பாடிடுவேன்!

நேரம் வரும் அப்பொழுதே நெஞ்சில் கவிதை பொங்கிடுமே!

சீரும் சிறப்பும் இல்லாததைச் செழுமையான கலையாக்கிடுவேன்!

சேர்க்கும் சொல்லின் ஆற்றலினால் செய்யலாம் என்ற நம்பிக்கையே!


எழுத்தாளனின் பார்வையிலே இயல்பானதும் அதிசயமாகும்!

எண்ணம் ஒன்று தோன்றிடவே எதையும் செய்யலாம் என்ற தைரியம்!

கழிவு என்று நினைத்ததெல்லாம் கனிவான பொக்கிஷமாகுமே!

கவிதை எழுதும் வல்லமையால் கற்பனை மெய்யாய் மாறிடுமே!

No comments:

காற்றுக்கென்ன பெயர்

 — தமிழுக்கும், அந்தத் தமிழை என் அய்யா கற்றுக்கொடுத்த நினைவுக்கும் ஒரு சிறு அஞ்சலி. இன்று காலை சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் புரட்டிக் கொண்ட...