Wednesday, June 12, 2013

மாய மோகம்



ஆழ்ந்திருக்கும் உறக்கத்தில்
தாழ்ந்திருக்கும் உத்வேகம்
விழித்திருக்கும் காமத்தில்
வீழ்ந்திருக்கும் விவேகம்.

நெகிழ்ந்திருக்கும் உணர்ச்சிகளோ
உமிழ்ந்திருக்கும் ஊழ்வினையை
வாழ்ந்திருக்கும் தர்மநெறியோ
உழண்டிருக்கும்  சங்கடத்தில்

மகிழ்ந்திருக்கும் மதியினிலே
சேர்ந்திருக்கும் சிற்றின்பம்
புகழ்ந்திருக்கும் திருநாமத்தால்
திகழ்ந்தோங்கும் பேரின்பம்.

No comments:

உயிரின் நிறைவே ராகம்

திருவையாறின் அந்த சுண்டும் மந்தமான காலைகளில், காவேரி மீது படிந்திருந்த பனிக்கட்டியை முதலில் கிழித்து விடுவது பறவைகளின் கீச்சல்ல, கோவில் மணிய...