Thursday, October 10, 2024

ஆயுதங்களின் ஒளி

 

கருவிகள் கைகளில் கனவுகள் நெஞ்சினில்

அறிவின் ஆயுதம் அன்பின் வெளிச்சமாய்

தொழிலின் தெய்வமாய் துலங்கும் நாளிது

ஆயுத பூஜையின் அருட்  பெரும் விழா


வாள் முதல் வில் வரை வண்ண மலர்களால்

பூசை செய்கின்றோம் புனிதம் கொள்கின்றோம்

கல்வி கேள்விகள் கருத்தின் ஆழங்கள்

எல்லாம் ஆயுதம் எழில் கொள் வாழ்க்கையில்


மண்ணில் மக்களாய் மலர்ந்த நாம் எல்லாம்

விண்ணை நோக்கியே வீறு கொள்கின்றோம்

ஆயுதங்களால் அமைதி காக்கின்றோம்

காயும் நெஞ்சங்கள் கசிந்து நெகிழட்டும்

தெய்வ ஒளியினால் திகழும் உலகமே!

No comments:

ஆச்சி

 ஆத்தா பெற்ற பெண்ணம்மா, அப்பச்சிக்குச் செல்லம்மா, அன்பு வைத்து வளர்த்தவளை ஆயிரம் பேர் சொல்லம்மா! ஐயா கைப்பிடித்துப் போனால் அந்தி நேரம் பொன்ன...