Saturday, October 5, 2024

கோமகளே!

 வேதம் வளர்க்கும் வெந்தழலே! வேண்டுகிறோம்

ஓதும் சோமம் ஊற்றிடவே - பகைவர்

சாய்ந்திடவே சந்நிதியில் சரணடைந்தோம்

தீர்ந்திடுமே துன்பங்கள் தேடிவரும்!


அக்னிபோல் ஒளிரும் அம்பிகையே! அருள்தவத்தால்

மிக்கவளே! மேன்மையுறும் வீரியத்தால்

துர்க்கை என்னும் தோகையரே! துணைபுரிய

நற்கதியை நல்கிடுவாய் நாடிவந்தோம்!


அக்கினியே! ஆபத்தை அகற்றிடுவாய்

மிக்கபுகழ் மேவிவரும் மெய்ப்பொருளே!

தக்கவரம் தந்திடுவாய் தளராத

புக்கியுடன் பூமியெலாம் பொலிவுறவே!


ஜாதவேத! ஜெயமளிப்பாய்! சகலதுயர்

போதமுடன் போக்கிடுவாய் புனிதமுடன்

ஆதரவாய் அத்ரிபோல் அழைத்திடுவோம்

காதலுடன் காப்பாற்று கருணையுடன்!


போர்க்களத்தில் புகழ்பெற்ற பொற்கொடியே!

ஆர்ப்பரிக்கும் அக்னிதேவா! அழைக்கின்றோம்

சீர்க்கமுடன் செல்வமெலாம் சேர்த்திடுவாய்

பார்க்குமிடம் பாதுகாப்பாய் பரிவுடனே!


தொன்மையான தூயவனே! தொழுதிடுவோம்

இன்னருளால் ஏற்றமிகு இறையவனே!

தன்னுடலை தழைத்திடவே தந்திடுவாய்

பொன்னுலகம் போற்றிடவே புரிந்திடுவாய்!


கோமகளே! கோவிந்தா! குலவிவரும்

நாமங்கள் நவிற்றிடுவோம் நண்ணியபின்

வானுலகின் வாசல்தனில் வந்துநிற்போம்

ஞானமுடன் நலம்பெருக நாடிடுவோம்!


காத்யாயனி! கன்னிகுமரி! கருணைமிகு

தூய்மையுறு துர்க்கையென தோத்திரிப்போம்

ஆத்மஞான அருள்தந்து அழைத்திடுவாய்

மோட்சபதம் மூன்றுலகும் முழங்கிடவே!

No comments:

The rise and rise of Luckin' Coffee

 Luckin Coffee. Does this sound a bell or ring a bell to any of you? I bet not. For most people outside of China and select parts of Southea...