கந்தனே போற்றுவோம் கடவுளே முருகா
கந்தமலர் சூடிடும் கருணையே கந்தா
வல்லவனே விரைந்திங்கு வாரடா தேவா
வல்லடி வணங்குவோம் வரமொன்று வேலா
செந்தில் ஆண்டவனே சிவகுமரன் முருகா
செந்தமிழ் பாடுவோம் சேவகர் நாதா
பண்ணிய பாவங்கள் பரிந்தொழி தேவா
பண்பிலா நானும் பணிகின்றேன் முருகா
தண்ணருள் தாராயே தாயினும் நாதா
தண்மலர் தூவிட தாழ்ந்தேன் குமரா
மண்ணிடை மாயையில் மறுகுவோம் தேவா
மண்ணை விட்டேற வழிகாட்டு முருகா
No comments:
Post a Comment