தோணி செல்லட்டும் — துறை விட்டு நீங்கட்டும்
வாணி போல் ஓடும் வையகக் வைகை
பேணும் திசை தனில் பெருகிச் செல்லட்டும் —
ஆணி வேர் விட்ட அச்சம் அகன்றிடட்டும்!
கரையில் நின்றவர் கைகளை விட்டனனர்
துரையும் நண்பரும் தூரம் ஆயினர்.
வரையும் நினைவுகள் வலியுடன் மறையட்டும் —
நரையும் காலமும் நம்மை அழைக்கின்றன!
அலைகள் தாக்கட்டும் — அஞ்சாது செல்லட்டும்
கலங்கரை விளக்கம் இல்லா கடல் கண்டாலும்
விலங்கா நீரோட்டம் வழி காட்டும் — அதனை
நலங்கொள் நெஞ்சத்தால் நம்பி முன்னேறிடு!
ஆறே நீ என்று அறிந்திடு உள்ளத்தில்
தோற்றம் வேறன்று தோணியும் நீரும் இல்
போற்றும் பயணமும் பயணிக்கும் உயிரும்
ஏற்றம் ஒன்றே என்று இதயம் உணரட்டும்!
மனிதன் உணரட்டும் — தோணியும் இல்லை
நதியும் இல்லை — நாமும் இல்லையே
ஒதுங்கா ஓட்டம் ஒன்றே உண்மை —
முதுகு திரும்பாமல் முன்னே போகட்டும்!
No comments:
Post a Comment