கணபதி உனக்கே கைகுவிக்கின்றேன்
கணமும் மறவேன் கமலத் திருவடி
கணிந்தெனை தேற்று கரிமுகத் தெய்வா
கண்களில் ஒளிரும் கதிர்நீ அல்லவா
வல்லமை நீயே வாழ்வினில் துணைவா
வல்லுயிர் உணரும் வான்பொருள் நீயே
வல்லவர் நெஞ்சில் வாழும் கணபா
வல்லடி வணங்கேன் வாழ்த்துகின்றேனே
பண்ணிய பழியெல்லாம் பரிந்தொழி ஐயா
பண்பே இல்லா பாவியேன் நானும்
பண்ணொலி இனிக்கும் பரம்பொருள் நீயே
பண்ணில் உனைப்பாடும் பாக்கியம் தாராய்
தண்ணருள் தாராய் தாழ்ந்தவன் என்னை
தண்மலர் தாளில் தனிந்து வணங்கேன்
தண்ணிய ஒளியே தர்மத்தின் வழியும்
தண்மையால் காப்பாய் தாயினும் மேலே
No comments:
Post a Comment