Monday, June 29, 2026

ஏர்

 உழவனின் குனிந்த உருவம் நோக்கு நீ!

தழுவும் மண்ணினை தன்னுயிராய் போற்றுவோன்!
வழுவா நேர்மையில் வாழும் அவன் தவம்
பழுதில் யோகமாம் — பார்த்து உணர்ந்திடு!

கோயிலில் கும்பிட்டுக் கண்மூடுவான் - ஆனால்
தாயின் மண்ணினைத் தாங்கிடத் தவறுவான்.
ஆயினும் உழவன் அன்றாடம் வணங்குவான் —
வாயில் மந்திரம் இல்லாமல் உழுதிடும்!

பாடம் படித்தவன் பலகை சுமந்திடும்!
வேடம் போட்டவன் வேதம் உரைத்திடும்!
நாடும் உண்மையை நாற்றாண்டு உழைத்தவன்
கூடும் மண்ணிலே கண்டடைந்திடுவான்!

வியர்வை சிந்திடும் வித்தை அறிவானே!
உயர்வு தாழ்வென்னும் உலகினை வெல்வானே!
செயலே தெய்வமாய்ச் செழிக்கும் நிலத்திலே
இயற்கை யோகியாய் இவனே திகழ்வானே!

மனிதன்உணர்கிறான் — முனிவரும் மாமுனியும்
கானகம் தேடினார் கடவுளை அங்கங்கே!
ஆனால் உழவனோ அன்னையின் மார்பிலே
மோனத்தில் உழுவான் — அவனே யோகியே!

No comments:

முன்னே போ

தோணி செல்லட்டும் — துறை விட்டு நீங்கட்டும் வாணி போல் ஓடும் வையகக் வைகை பேணும் திசை தனில் பெருகிச் செல்லட்டும் — ஆணி வேர் விட்ட அச்சம் அகன்றி...